- Description
- Specifications
- Post a comment
இராமயணத்தில் தமிழ் முனிவரான அகஸ்த்தியரை குறிப்பிடுவது ஒரு ஆச்சரியமாகும். யுத்தகளத்தில் ஸ்ரீராமன் படையெடுத்து இலங்கைக்கு செல்ல, அவன் வெற்றியடையும் பொருட்டு அகஸ்த்திய முனிவர் சூரியனை வணங்கினால் ஜயம் நிச்சயம் என்கிறார்.
சூரியனை வழிபடுவதற்கான ஸ்தோத்திரமே ஆதித்ய ஹ்ருதயமாகும். தினம் தினம் இதை வழிப்பட்டால், நாம் எடுத்த காரியம் ஜயம் அடைவது நிச்சயமாகும்.
பக்தர்கள் இதை தினம் பாராயனம் செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
ததோ யுத்த பரிஸ்ரான்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்||
தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யா கதோ ரணம் |
உபகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:||